No results found

    கடைசி 10 ஆண்டில் பார்த்தது டிரைலர் மட்டுமே: பிரதமர் மோடி பேச்சு


    உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல்.

    உலகளவில் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தபோது, நாட்டில் வறுமை அதிகரித்தது. 5-வது இடத்திற்கு வந்த போது, 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறினர்.

    3-வது இடத்திற்கு வரும்போது வறுமை முற்றிலும் அகற்றப்படுவதுடன், அதிகாரம் பெற்ற மத்திய தர வர்க்கத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பார்கள்.

    கடைசி 10 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான டிரைலரை மட்டும் பார்த்துள்ளீர்கள். நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மக்கள் முன்பு உள்ளது. மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது.

    அடுத்த 5 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம்.

    ஊழல்வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தடை வந்தாலும் அதை நிறுத்த மாட்டேன். ஊழல்வாதிகள் ஒன்றுசேர்ந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال