No results found

    பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது: அண்ணாமலை


    தமிழகத்தின் கல்வி வள்ளலான டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தார், பாஜக தலைவர் அண்ணாமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர்.

    பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

    முன்னதாக, பெரம்பலூர் நான்கு ரோடு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூட்டணி கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒருசேர பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்தனர்.

    பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரெயில் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது.

    இம்முறை பாரிவேந்தர் வெற்றி பெற்றால் 1,500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.

    மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்துவந்தவர் பாரிவேந்தர். பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.

    தாமரைச் சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க. நிர்வாகியும், தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்க வேண்டும்.

    பெண்களை அவமானப்படுத்தும் தி.மு.க.வின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம். உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்வது நமது கடமை என பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال